பாலியல் புகார்: காதலியின் புகார்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்த ஹாக்கி கேப்டன் சர்தார் சிங்
டெல்லி: இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் தனது காதலி அளித்துள்ள புகார் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் மீது வெளிநாடு வாழ் இந்தியரான அஷ்பல் போகல் என்ற பெண் லூதியானா காவல் நிலையத்தில் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அஷ்பல் சர்தாரின் நீண்ட நாள் காதலி ஆவார்.

ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்ட பிறகு 2012ம் ஆண்டு அவரை நேரில் சந்தித்ததாக தெரிவித்துள்ளார் அஷ்பல். மேலும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு சேர்ந்து வாழ்ந்ததில் தான் கர்ப்பமானதாகவும், சர்தாரின் வற்புறுத்தலால் கருவை கலைத்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருவை கலைத்த பிறகு சர்தார் தன்னை பிரிந்து சென்றுவிட்டதாக அஷ்பல் கூறியுள்ளார். சர்தாரும், அவரது சகோதரரும் தன்னை மனம் மட்டும் உடல் ரீதியாக கொடுமைப்படுத்தியுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார் அஷ்பல்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க சர்தார் சிங் மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications