உ.பி.யில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் சரிதா நாயருக்கு மிளகாய் சின்னம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் சரிதா நாயருக்கு மிளகாய் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடிகை சரிதா நாயர் சோலார் பேனல் மோசடி வழக்கில் சிறை சென்றவர் ஆவார்.

இவர் கேரளாவில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுலை எதிர்த்து வேட்பு மனுதாக்கல் செய்தார். இதேபோல் எர்ணாகுளம் தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் சரிதா நாயர் மீது குற்றவழக்குகள் இருந்ததால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

Saritha Nair contesting against Rahul Gandhi in Amethi as an independent candidate with green chilli symbol

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அங்கு அவரை எதிர்த்து நடிகை சரிதா நாயர் மீண்டும் வேட்பு மனுதாக்கல் செய்தார். ஆனால் கேரளாவில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், உத்தரப்பிரதேசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அமேதி உள்ளிட்ட தொகுதிகளில் நேற்று வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடந்தது. அப்போது சரிதா நாயருக்கு பச்சை மிளகாய் சின்னம் ஒதுக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+