நான் மட்டும் வாய் திறந்தால் கேரள அரசு கவிழ்ந்துவிடும்: பலகாலமாக கூறும் சரிதா

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சோலார் பேனல் வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் சரிதா நாயர் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவிப்பதாக பலகாலமாக கூறி வருகிறார்.

சோலார் பேனல் ஊழல் வழக்கில் கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதில் சரிதா நாயர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

கேரள அரசியல்வாதிகள் பலரைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்களை தெரிவிப்பதாக அவர் பலகாலமாக கூறி வருகிறார்.

கேரள அரசு

கேரள அரசு

என்னிடம் உள்ள சில ஆவணங்களை வெளியே விட்டால் கேரள அரசு கவிழ்ந்துவிடும் என்று சரிதா நாயர் கூறினாரே தவிர அதை இன்றுவரை வெளியிடவில்லை.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள்

தனக்கு பல அரிசயல்வாதிகளுடன் பழக்கம் உள்ளது என்றும், தான் எது கூறினாலும் அவர்கள் கேட்பார்கள் என்றும் கூறினார் சரிதா. ஆனால் அந்த அரசியல்வாதிகளின் பெயரை அவர் தெரிவிக்கவில்லை.

குழந்தை

குழந்தை

சரிதா சிறையில் இருக்கையில் அவருக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தந்தை யார் என்று கேட்டபோது கதறி அழுதார். பின்னர் அது ஒரு பிரபல அரசியல் தலைவரின் குழந்தை என்று தெரிவித்தார்.

பாலகிருஷ்ண பிள்ளை

பாலகிருஷ்ண பிள்ளை

சிறையில் இருந்து வெளியே வந்த சரிதா நாயர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளையின் உறவினரின் வீட்டில் தங்கியிருந்தார். பாலகிருஷ்ண பிள்ளைக்கும், சரிதாவுக்கும் எப்படி பழக்கம் என்று தெரியவில்லை. சரிதா சிறையில் இருக்கையில் பாலகிருஷ்ண பிள்ளைக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

போலீசார்

போலீசார்

கேரள போலீஸ் அதிகாரிகள் பலருக்கு எதிரான வீடியோக்கள் தனது லேப்டாப்பில் இருந்ததாகவும் அதை போலீசார் கைப்பற்றிவிட்டதாகவும் சரிதா தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+