சரிதா நாயரின் ஆபாச வீடியோவை டவுன்லோட் செய்த 28,000 பேரின் செல்போன்கள் கண்காணிப்பு!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சோலார் பேனல் வழக்கில் சிக்கியுள்ள சரிதா நாயரின் ஆபாச வீடியோவினைப் பதிவேற்றம் செய்த 28 ஆயிரம் பேரின் செல்போன்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் சரிதா நாயர். இவரது ஆபாச படங்கள் சமீபத்தில் வாட்ஸ் அப் மற்றும் இணைய தளங்களில் வெளியானது.

இதுபற்றி சரிதா நாயர் போலீசில் புகார் செய்ததோடு கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.

வீடியோவினை வெளியிட்டவர்:

வீடியோவினை வெளியிட்டவர்:

போலீசார் நடத்திய விசாரணையில், சரிதா நாயரின் வழக்கை விசாரித்த போலீஸ்காரர் ஒருவர் ஆபாச படங்களை வெளியிட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

போலீசார் கண்காணிப்பு:

போலீசார் கண்காணிப்பு:

இந்த நிலையில் செல்போனில் பரவிய சரிதாநாயரின் ஆபாச படங்கள் சுமார் 28 ஆயிரம் பேரின் செல்போன்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த செல்போன் எண்களின் செயல்பாடுகளை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

அரசியல் உள்நோக்கம்:

அரசியல் உள்நோக்கம்:

இதுகுறித்து சரிதா நாயர், "எனது ஆபாச படங்கள் வெளியானதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது.

பேட்டிக்காக வற்புறுத்தல்:

பேட்டிக்காக வற்புறுத்தல்:

முதல்வர் மற்றும் சில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீது குற்றம் சாட்டி அறிக்கை வெளியிடவும், பேட்டி கொடுக்கவும் சிலர் என்னை வற்புறுத்தினர். அதற்கு நான் மறுத்ததால் அவர்கள் எனது ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி வந்தனர்.

மலையாளத்தில் மிரட்டல்:

மலையாளத்தில் மிரட்டல்:

சவூதி அரேபியா, ஓமன், துபாய் நாடுகளில் இருந்து இந்த மிரட்டல் வந்தது. அங்கிருந்து பேசியவர்கள் மலையாளத்தில்தான் மிரட்டல் விடுத்தனர்.

தற்கொலைக்கு தூண்டுதல்:

தற்கொலைக்கு தூண்டுதல்:

இதன் மூலம் என்னை தற்கொலைக்கு தூண்டுவதே அவர்களின் நோக்கம்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+