பெங்களூரு சிறையில் சசிகலாவின் 'தோழி'யாக 'கொள்ளைக்காரி பமீலா'

கடந்த 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவுக்கு தோழியாக இருந்த சசிகலாவுக்கு தற்போது பெங்களூர் சிறையில் பமீலா என்ற கொள்ளைக்காரி புதிய தோழியாக கிடைத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கடந்த 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவுக்கு தோழியாக இருந்த சசிகலாவுக்கு தற்போது பெங்களூர் சிறையில் பமீலா என்ற சிறை கைதி புதிய தோழியாக கிடைத்துள்ளார்.

கடந்த 1982-களில் கடலூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவின் பேச்சை வீடியோ எடுக்கும் ஒப்பந்தம் சசிகலா நடராஜனுக்கு வழங்கப்பட்டது. அதுமுதல் போயஸ் தோட்டத்துக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பை பெற்றார்.

இந்நிலையில் எம்ஜிஆர் இறப்புக்கு பிறகு பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளரானார் ஜெயலலிதா. அதன் பின்னர் 1991-ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தார்.

 நிழலாக மாறிய சசிகலா

நிழலாக மாறிய சசிகலா

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி அவருடனேயே போயஸ் தோட்டத்தில் தங்கியிருந்தார் சசிகலா. அவரது அக்காள் மகன் சுதாகரனை தத்து எடுத்துக் கொண்ட ஜெ. ஊரே மெச்சும் அளவுக்கு திருமணம் செய்து மக்களின் அதிருப்தியை பெற்றார். பின்னர் அடுத்து 1996-இல் ஆட்சிக்கு வந்த திமுக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கை பதிவு செய்தது.

 ஜெ.இறப்பு

ஜெ.இறப்பு

உடல்நல கோளாறு காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை யாரும் சந்திக்க விடாமல் சசிகலா தடுப்புகளை ஏற்படுத்தினார். அதன் பின்னர் 75 நாள்கள் கழித்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவுடனேயே அவர் இருந்தார்.

 சொத்துக் குவிப்பு வழக்கு

சொத்துக் குவிப்பு வழக்கு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சசிகலாவும், இளவரசியும் ஒரே அறையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் இளவரசி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் சிறைத் துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சசி மிகுந்த கவலை அடைந்துள்ளார்.

 புதிய தோழி

புதிய தோழி

கடந்த இரண்டரை மாதங்களில் வக்கீல்களை தவிர வேறு யாரும் வந்து சந்திக்க வில்லை என்ற கவலையில் உள்ள சசிகலா. இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு இவர் தோழியாக இருந்தது போல் இவருக்கு தற்போது சிறையில் ஒரு தோழி கிடைத்துள்ளார். அவரது பெயர் பமீலா. திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அவர் சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வருவதுடன் அவருக்கு வேண்டிய உதவிகளையும் செய்து வருகிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+