For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலா பரோல் கேட்கவில்லை! - புகழேந்தி

By Shankar
Google Oneindia Tamil News

பெங்களூரு: உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனுக்காக சசிகலா பரோல் கேட்கவில்லை என கர்நாடகா அதிமுக தினகரன் அணியின் நிர்வாகி புகழேந்தி தெரிவித்தார்.

அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, அதை பெங்களூர் சிறையில் அனுபவித்து வருகிறார்.

Sasikala not apply for parol

சசிகலாவின் கணவர் ம நடராஜன் உடல் நிலை மோசமாகியுள்ளது. அவரது சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் செயலிழந்து, மாற்று உறுப்புகள் பொருத்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

கணவர் உடல் நிலை மோசமடைந்ததை அறிந்த சசிகலா, அவரை நேரில் பார்க்க பரோலில் வர விரும்பியதாகவும், அதற்காக சிறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டதாகவும் தகவல் பரவியது.

ஆனால் இதனை மறுத்துள்ளார் கர்நாடகா அதிமுக நிர்வாகியான புகழேந்தி. "சசிகலா பரோல் கேட்கவில்லை. தேவையில்லாமல் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன," என்று அவர் தெரிவித்தார்.

English summary
Karnataka ADMK functionary Pugalendhi has denied that Sasikala seeking parol to see her husband Natarajan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X