சசிகலா வருகையால் எந்த மாற்றமும் ஏற்படாது: ஜெயக்குமார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சசிகலா பரோலில் வெளியே வந்துள்ள நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது: பரோலில் வந்துள்ள சசிகலாவை அமைச்சர்கள் சந்திக்க மாட்டார்கள். சசிகலாவை பார்ப்பேன் எனக்கூறிய அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் கூட சசிகலாவை சந்திக்கப்போவதில்லை என கூறியுள்ளார்.
எனவே சசிகலா வருகையால் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
5 நாட்கள் பரோலில் வெளியே வந்துள்ள சசிகலா, அரசியல் ரீதியாக எதிலும் ஈடுபடக்கூடாது என்றும், மீடியாக்களை சந்திக்க கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications