For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீராய்வு மனு விவகாரம்... திவாகரன் அனுப்பிய பகீர் தகவல்- சசிகலா பயங்கர ஷாக்!

திவாகரன் அனுப்பிய ஒரு தகவலால் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனாராம் சசிகலா.

Google Oneindia Tamil News

பெங்களூரு: திவாகரன் அனுப்பிய ஒரு தகவலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார் சசிகலா என்கிறது மன்னார்குடி வட்டாரங்கள்.

சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் அவரை ஓரம்கட்டி ஒதுக்குவதில் முனைப்புடன் இருந்தார் தினகரன். ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் சசிகலா பெயர் முழுமையாக ஒதுக்கி வைக்கப்பட்டது.

சீராய்வு மனு

சீராய்வு மனு

பின்னர் தினகரன் சிறைக்கு போய்விட்டு திரும்பியதும் சசிகலாவை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினார். தற்போது சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது.

சசி நம்பிக்கை தகர்ந்தது

சசி நம்பிக்கை தகர்ந்தது

தாம் எப்படியும் விடுதலையாகிவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்த சசிகலாவுக்கு திவாகரன் அனுப்பிய செய்திதான் பேரிடியாக இருந்திருக்கிறது. சசிகலாவின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட வேண்டும் என்பதற்காக அத்தனை உள்ளடி வேலைகளையும் தினகரன் தரப்பு செய்திருக்கிறதாம்.

தினகரனின் உள்ளடி வேலைகள்

தினகரனின் உள்ளடி வேலைகள்

டெல்லியில் தினகரன் தரப்பு யாரையெல்லாம் அணுகிறார்களே அவர்களே மன்னார்குடி தரப்பில் போட்டுக் கொடுத்துவிட்டனர். இதற்குத்தான் காத்திருந்தேன் என திவாகரனும் தினகரன் செய்த காரியங்களை பட்டியல் போட்டு சசிகலாவுக்கு ஆதாரங்களுடன் கொடுத்து அனுப்பியுள்ளார்.

அதிர்ந்த சசிகலா

அதிர்ந்த சசிகலா

இத்தகவல்களைக் கேட்ட சசிகலா கடும் அதிர்ச்சியில் உறைந்து போனாராம். தினகரனை ஆளாக்கியதற்கு நல்ல பரிசுதான் இது என நொந்து போய்விட்டாராம் சசிகலா.

English summary
ADMK Sources said that Sasika very upset over the Dinakaran movements against her release.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X