7 தமிழர் விடுதலைக்கு எதிரான மத்திய அரசு வழக்கில் வாதங்கள் நிறைவு- தீர்ப்பு ஒத்திவைப்பு!
டெல்லி: ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மத்திய அரசு மனு மீதான அனைத்து வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ராஜிவ் காந்தி வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இதனைத் தொடர்ந்து ராஜிவ் வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்துக்கு போனது மத்திய அரசு. இதனிடையே மத்திய அரசு, பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு ஆயுள் தண்டனையாக குறைத்ததை எதிர்த்தும் சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றமோ மத்திய அரசின் சீராய்வு மனுக்களைத் தள்ளுபடி செய்து 3 தமிழரின் தூக்கை ரத்து செய்தது சரி என திட்டவட்டமாக கூறியது.
இதனைத் தொடர்ந்து 7 தமிழரை விடுதலை செய்வதற்கு அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளதா? இல்லையா? என்ற மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி தத்து தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக நடைபெற்று வந்தது.
கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற அனைத்து தரப்பு வாதங்களும் இன்றுடன் முடிவடைந்தன. 7 தமிழர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜராகி வாதாடினார்.
இன்றைய விசாரணையின் போது, 7 தமிழரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரினால் ஜனாதிபதியைத்தான் அணுகலாம்; 23 ஆண்டுகாலம் சிறையில் இருந்ததாலேயே விடுதலை செய்துவிடலாம் என்ற தமிழக அரசின் முடிவு சரியல்ல என்று மத்திய அரசு வாதிட்டது.
இதனைத் தொடர்ந்து அனைத்து தரப்பும் தங்களது வாதங்களை 1 வார காலத்துக்குள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications