ஐபிஎல் பெட்டிங்... குருநாத்திடம் விசாரணை நடத்துகிறது சுப்ரீம் கோர்ட் நியமித்த குழு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஐபிஎல் போட்டிகளின் போது பெட்டிங்கில் ஈடுபட்டது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் என்.சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனிடம் உச்சநீதிமன்றம் நியமித்த குழு விசாரணை நடத்த இருக்கிறது.
ஐபிஎல் முறைகேடுகள் தொடர்பாக பஞ்சாப் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முட்கல், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நாகேஸ்வர் ராவ் மற்றும் மூத்த வழக்கறிஞர் நிலேஷ் தத்தா ஆகியோரை உள்ளடக்கிய குழுவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

அக்குழு தமது பணிகளைத் தொடங்கியுள்ளது. உச்சநீதிமன்றம் விதித்துள்ளக் எடு காலத்துக்குள் விசாரணையை எப்படி முடிப்பது என்று அக்குழு உறுப்பினர்கள் விவாதித்துள்ளனர்.
விரைவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் என்.சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனிடமும் அக்குழு விரைவில் விசாரணை நடத்த உள்ளது.












Click it and Unblock the Notifications