தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி நீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு- இதையாவது நிறைவேற்றுமா கர்நாடகா?
தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி நீரை திறக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையாவது கர்நாடகா நடைமுறைப்படுத்துமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

டெல்லி: தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறக்க உச்சநீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பையாவது கர்நாடகா செயல்படுத்துமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
காவிரி நதிநீரை தமிழகத்துக்கு திறந்துவிட தொடர்ந்து மறுத்து வருகிறது கர்நாடகா. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் 192 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு திறக்க உத்தரவிடப்பட்டது.

ஆனால் கர்நாடகாவோ 60 டிஎம்சியை குறைத்து 132 டிஎம்சி கொடுத்தாலே போதும் என உச்சநீதிமன்றத்துக்கு போனது. இப்போது கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் நீர் அளவை குறைத்துவிட்டது உச்சநீதிமன்றம்.
192 டிஎம்சி நீர் என்பது இப்போது 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டுள்ளது. சரி தற்போதைய தீர்ப்பின்படி தமிழகத்துக்கு கர்நாடகா 177.25 டிஎம்சி நீரை திறந்துவிட்டே ஆக வேண்டும்.
கர்நாடகா கூடுதலாக 14.75 டிஎம்சி நீரைப் பெற்றுள்ளது. இந்த நிலையிலாவது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படியே 177.25 டிஎம்சி நீரையாவது தமிழகத்துக்கு கர்நாடகா திறந்துவிடுமா? என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications