நிர்பயா வழக்கில் இளம் குற்றவாளி விடுதலைக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் டிஸ்மிஸ்!!
டெல்லி: நாட்டை உலுக்கிய நிர்பயா பலாத்கார வழக்கில் இளம் குற்றவாளியை விடுதலை செய்ததை எதிர்த்து டெல்லி மகளிர் ஆணையம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
டெல்லியில் மருத்துவ மாணவி 'நிர்பயா' 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் கொடூரமாக தாக்கப்பட்டு பேருந்தில் வெளியே வீசப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் சிகிச்சை பலனின்றி 'நிர்பயா' உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் சிறைக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டார்.
எஞ்சிய குற்றவாளிகளில் ஒருவருக்கு 17 வயதுதான் ஆகி இருந்தது. இதனால் அவர் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிறார் குற்றவாளிகள் சட்டத்தின்படி அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதன்படி சிறார் சீர்திருத்த பள்ளியில் இளம் குற்றவாளி அடைக்கப்பட்டிருந்தார். அவரது தண்டனைக் காலம் முடிவடைந்த நிலையில் நேற்று விடுவிக்கப்பட்டார். அவரது விடுதலைக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் டெல்லி மகளிர் ஆணையம், இளம் குற்றவாளி விடுதலைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.
இதை இன்று விசாரித்த நீதிபதிகள் ஏ.கே. கோயல், யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், டெல்லி மகளிர் ஆணையத்தின் மனுவை தள்ளுபடி செய்தது. அப்போது, இளம் குற்றவாளியின் தண்டனையை நீடிக்க சட்டத்தில் இடமில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
எங்களுக்கும் கவலைதான்...ஆனால்
இதை இன்று விசாரித்த நீதிபதிகள் ஏ.கே. கோயல், யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அப்போது, சிறார் சீர்திருத்த சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட தண்டனை முடிந்த பிறகும் ஒருவரது சுதந்திரத்தை கட்டுப்படுத்த சட்டத்தில் இடமில்லை. அதாவது இளம் குற்றவாளியின் தண்டனையை நீடிக்க சட்டத்தில் இடமில்லை.
மேலும் இளம் குற்றவாளியின் விடுதலை எங்களுக்கும் கவலை தருகிறது. ஆனால் சட்டத்துக்கு அப்பாற்பட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்பதால் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என த்ரிவித்தது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications