For Daily Alerts
Just In
சசிகலா முதல்வராக தடை கோரிய வழக்கு.. பைசல் செய்தது சுப்ரீம் கோர்ட்!
சசிகலா முதல்வராக தடை கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
டெல்லி: சசிகலா முதல்வராக தடை கோரி அகில பாரத இந்து மகா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும் மனுவில் முகாந்திரம் இல்லை என கூறி வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அக்கட்சியின் சட்டசபைக்குழு தலைவராக பிப்ரவரி 5ஆம் தேர்வு செய்யப்பட்டார். இதை அடுத்து, அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார் என்று கூறப்பட்டது. இதனை எதிர்த்து பலரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு காரணமாக சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சசிகலா முதல்வராக தடை கோரி அகில பாரத இந்து மகா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவில் போதுமான முகாந்திரம் இல்லை என கூறி வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தனர்.
Comments
English summary
SC disposed off a petition seeking to prevent Sasikala from holding post of TN CM as she is convicted in DA case not eligible.
Story first published: Friday, March 3, 2017, 13:08 [IST]