பிசிசிஐ விதிகளை "பட்டி டிங்கரிங்" பார்க்க 3 நபர் குழு அமைப்பு!
டெல்லி: ஓட்டை உடைசலான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிகளையும், சட்டத் திருத்தங்களையும் மறு ஆய்வு செய்து பரிந்துரைப்பதற்காக 3 பேர் கொண்ட கமிட்டியை அமைத்து சுப்ரீ்ம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இது கிரிக்கெட் வாரியத்தை ஒட்டுமொத்தமாக நிலை குலைய வைக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், தற்போது உள்ள பிசிசிஐ சட்ட விதிகள் பெரும்பாலும், சட்டத்தின் பிடியிலிருந்தும், அரசின் பிடியிலிருந்தும், ஆர்டிஐ வரம்புக்குள் சிக்காத வகையிலும் மிகவும் சுயநலனுடன் கூடியதாக, மக்கள் விரோத விதிகளாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அரசுக்கும், சட்டத்திற்கும், மக்களுக்கும் கட்டுப்பட்டது கிரிக்கெட் வாரியம். அது சட்ட வரம்புக்குள் வராதது அல்ல என்று சுப்ரீம் கோர்ட் அதிரடியாக இன்று கூறி விட்டது.
மேலும் வாரியத்தின் அத்தனை விதிகள், சட்ட திட்டங்கள், திருத்தங்கள மறு ஆய்வு செய்து பரிந்துரை அளிக்குமாறு 3 நபர் கமிட்டியை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்தக் கமிட்டியின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, அசோக் பான், ஆர்.வி. ரவீந்திரன் ஆகியோரை பெஞ்ச் அறிவித்துள்ளது.
இந்தக் கமிட்டி இன்றிலிருந்து 6 மாதத்திற்குள் ஆய்வு நடத்தி சுப்ரீம் கோர்ட்டிடம் பரிந்துரைகளை அளிக்கும்.
வாரியத்தின் சட்டவிதிகள், தேவையில்லாதது, சட்டவிரோதமானது என்று எது இருந்தாலும் அதுகுறித்து மறு ஆய்வு செய்யவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான உத்தரவை நீதிபதிகள் பிறப்பிக்கும்போது பிசிசிஐ ஒரு சொசைட்டி என்று அதன் வக்கீல்கள் சார்பில் எடுத்துக் கூறப்பட்டது. அதற்கு நீதிபதிகள், சொசைட்டியாக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் ஆக வேண்டும் என்று கூறி விட்டனர்.
-
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை












Click it and Unblock the Notifications