கச்சத்தீவு தொடர்பாக கருணாநிதி வழக்கு- 6 வாரத்துக்கு ஒத்திவைப்பு!

Subscribe to Oneindia Tamil

SC granted six weeks time to centre on Katchatheevu row
டெல்லி: கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததை ரத்து செய்யக் கோரி திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் 6 வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் ஜூலை மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் கடந்த 1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் இந்திய இலங்கை இடையிலான கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை இந்தியா திரும்பப்பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனு 15-ந்தேதி விசாரணைக்கு வந்தபோதே இது குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் சரத் அரவிந்த் பாப்டே ஆகியோரது பெஞ்ச் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் பாரஸ் இம் மனு தொடர்பாக பதிலளிக்க கூடுதலாக 8 வார காலம் அவகாசம் தேவையென கேட்டுக் கொண்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் 6 வார காலம் பதிலளிக்க மத்திய அரசிற்கு அவகாசம் வழங்கி வழக்கை ஒத்தி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+