நிர்வாண மசாஜ் புகார்... சசிகலா புஷ்பாவின் முன்ஜாமீன் மனு மீது வெள்ளியன்று விசாரணை
டெல்லி: வீட்டு பணிப் பெண்களை நிர்வாண மசாஜ் செய்ய கட்டாயப்படுத்தியது தொடர்பான வழக்கில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் வரும் வெள்ளியன்று விசாரணை நடைபெற உள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி சசிகலாபுஷ்பா வீட்டில் வேலை பார்த்து வந்த இளம்பெண் பானுமதி, அவருடைய சகோதரி ஜான்சி ஆகியோர் சசிகலாபுஷ்பா குடும்பத்தினர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில் சசிகலாபுஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப்ராஜா, சசிகலாபுஷ்பாவின் தாயார் கவுரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து சசிகலாபுஷ்பா எம்.பி. உள்பட 4 பேரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி வேலுமணி, சசிகலா புஷ்பா உட்பட அவரது குடும்பத்தினரின் முன் ஜாமீன் மனுவை நிராகரித்தார்.
இதனால் முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பாவும் அவரது குடும்பத்தினரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனு மீது வரும் வெள்ளிக்கிழமையன்று விசாரணை நடைபெற உள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையிலான பெஞ்ச், சசிகலா புஷ்பாவின் முன்ஜாமீன் மனுவை விசாரிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications