தியேட்டர்களில் தேசிய கீதம்.. பள்ளி பருவத்தோடு மறந்த கீதத்தை இனியாவது ஒழுங்காய் பாடுவோம்!
டெல்லி: தேசிய கீதம் ஒலிக்கும்போது திரையில் தேசிய கொடியை காட்டவேண்டும். தேசிய கீதம் ஒலிக்கும்போது திரையரங்குக்குள் இருக்கும் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று, வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தேசிய கீதம் ஒலிக்கப்படுவதில் வணிகரீதியான ஆதாயம் எதுவும் தேடக்கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தேசிய கீதம் இசையமைப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மாநில அரசுகளுக்கும் மத்திய அரசிடம் இருந்து சுற்றறிக்கை வந்தபிறகு திரையரங்குகளில் இனி படம் திரையிடப்படுவதற்கு முன் தேசிய கீதம் ஒலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பள்ளிக் காலம்
இப்போதெல்லாம் தேசிய கீதம் என்பது பள்ளி பருவத்திற்கு பிறகு கேட்க முடியாத பொருளாகிவிட்டது. இனிமேல் சிறியவர் முதல் பெரியவர் வரை தேசிய கீதத்தை கேட்க, இந்த உத்தரவு பயன்தரும்.

52 வினாடிகள் அவசியம்
தேசிய கீதத்தை 52 வினாடிகளில் பாடி முடிக்க வேண்டியது கட்டாயமாகும். ஆனால், நாமாக வாய் திறந்து பாடும்போது இந்த கணக்கில் கோட்டை விட்டுவிடுவோம். இனிமேல் திரையரங்குகளில் 52 வினாடிகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் என்பதால், அதை கேட்பது நல்ல பயிற்சியை தரும்.

தேச ஒருமைப்பாடு
தேசத்தை ஒருமுகப்படுத்த ஏதாவது ஒரு பிணைப்பு அவசியம். தேசிய கீதம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, குஜராத் முதல் அசாம் வரையிலும், "ஜன கன மன" என தொடங்கும் தேசிய கீதத்தை கேட்டதும், வேறுபாடுகள் மறக்கப்பட்டு இந்தியர் என்ற உணர்வு மேலோங்குவதை பார்க்க முடியும்.

புது முயற்சி
கிரிக்கெட் உலக கோப்பை போன்ற முக்கிய போட்டிகளின்போது தேசிய கீதம் இசைக்கப்படும்போது, ரசிகர்களுக்கு அது தரும் உத்வேகமே தனி என்பதை விளையாட்டு ரசிகர்கள் உணர்ந்திருப்பார்கள். இனிமேல் தியேட்டர்களிலும் தேசிய ஒருமைப்பாடு ஓங்கும் என நம்பலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications