For Daily Alerts
Just In
சிவிசி நியமனத்தில் மத்திய அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை- சுப்ரீம் கோர்ட் விளாசல்
டெல்லி: தலைமை ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணையர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறைகள் நம்பகத்தன்மையை சீர்குலைப்பதாக உள்ளதாகவம் அது கூறியுள்ளது. இதன் காரணமாக தகுதி வாய்ந்தவர்கள் இப்பதவிகளில் அமர்வதற்கு குந்தகம் ஏற்படும் என்றும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த வழக்கு முடியும் வரை புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் உறுதியளித்தார்.
வழக்கமாக இதுபோன்ற நியமனங்கள் தொடர்பான நியமனக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவரும் ஒரு முக்கிய உறுப்பினராக இடம் பெறுவார். ஆனால் அதை மத்திய அரசு மாற்றி, எதிர்க்கட்சித் தலைவர் இல்லாவிட்டாலும் கூட தேர்வை நடத்தலாம்ன்பது போல விதிமுறையை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
The Supreme Court has expressed unhappiness over the procedure proposed by the government for the appointment of the Chief Vigilance and Vigilance Commissioners. The court has criticised the appointment procedure saying it lacks transparency.
Story first published: Thursday, September 18, 2014, 18:30 [IST]