நீதிமன்ற கண்காணிப்பு வழக்கில் அதிகாரிகளை விசாரிக்க அனுமதி தேவையில்லை: உச்சநீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இது உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்று மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால் நீதிமன்றங்கள் கண்காணிக்கும் வழக்குகளில் இணை செயலாளர் மற்றும் அதற்குமேல் அந்தஸ்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்த மத்திய அரசின் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications