For Quick Alerts
For Daily Alerts
Just In
நீதிபதிகள் நியமனங்களில் அலட்சியம் ஏன்? மத்திய அரசு மீது சுப்ரீம்கோர்ட் பாய்ச்சல்
டெல்லி: நீதிபதிகளின் நியமனங்களில் அலட்சியம் காட்டுவது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நீதிபதிகள் நியமனம் மற்றும் இடம்மாறுதல் தொடர்பான வழக்கில் மத்திய அரசை உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாக சாடியுள்ளது.
இது வரையில் நியமனம், இடம் மாறுதல் தொடர்பான 75 பேர் பட்டியல் தரப்பட்டும் மத்திய அரசு அதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருகிறது. இப்படி நீதிபதிகள் நியமன விவகாரங்களை முடக்கிப் போடுவது யார் என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் உச்சநீதிமன்றமே மத்திய அரசின் விவகாரங்களில் தலையிட நேரிடும். இந்த காலதாமதம் தொடர்பாக 4 வார காலத்துக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments
English summary
The Supreme court today slammed the Centre on Judicial appointments.
Story first published: Friday, August 12, 2016, 14:01 [IST]