சாமிக்கு எதிராக அதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை
டெல்லி: அதிமுக அரசு சுப்பிரமணியம் சாமிக்கு எதிராக தொடர்ந்துள்ள கிரிமினல் அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மேலும், அரசியல் சாசனச் சட்டப்படி, ஐபிசி, சிஆர்பிசி பிரிவுகளின் கீழ் அவதூறு வழக்குகளைத் தொடர முடியாது என்று கூறிய சாமியின் வாதம் குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில் சுப்பிரமணியன் சாமி தனது டிவிட்டரில் வெளியிட்ட சில டிவிட் செய்திகள் தொடர்பாக ஐந்து அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குப் போய் விட்டதால், கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்தார் சாமி.
Tomorrow I am arguing in the SC what could become a landmark in our democracy--constitutionality of criminal law on defamation.
— Subramanian Swamy (@Swamy39) October 29, 2014 அதேசமயம், இந்த அவதூறு வழக்குகளில் தான் நேரில் ஆஜராகாமல் இருக்க விலக்கு அளிக்குமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். மேலும் இந்த வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடிசெய்யவும் அவர் கோரியிருந்தார்.
அவர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்று அவரது மனு மீதான மேல் விசாரணை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சாமி மீதான அவதூறு வழக்குகள் அனைத்திற்கும் இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், அரசியல் சாசனப்படி, ஐபிசி மற்றும் சிஆர்பிசி ஆகிய பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குகளைத் தொடர முடியாது என்று வாதிட்ட சாமியின் கூற்றை ஏற்ற நீதிபதிள் இதுகுறித்து மத்திய அரசும், தமிழக அரசும் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications