காவிரி வழக்கில் இனி யாரும் 15 வருடங்களுக்கு மேல்முறையீடு செய்ய முடியாது: சுப்ரீம் கோர்ட் தடாலடி
Recommended Video
டெல்லி: காவிரி வழக்கில் இனி மேல்முறையீடு செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி தமிழகத்திற்கான நீரில் அளவு 14.75 டிஎம்சி குறைக்கப்பட்டு 177.2 டிஎம்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவுக்கு இதே அளவு தண்ணீர் அதிகம் கிடைக்கப்போகிறது.
அதேநேரம், இந்த உத்தரவு அடுத்த 15 வருடங்களுக்கு செல்லுபடியாகும் என்றும் பின்னர், அப்போதைய நிலையை கருத்தில் கொண்டு பரிசீலிக்கலாம் என கூறியுள்ளதன் மூலம், உச்சநீதிமன்றம், காவிரி பிரச்சினைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மேலும், காவிரி தொடர்பான, அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து இதன் மூலம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் சீராய்வு மனுவை தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் அளித்த இந்த தீர்ப்பை எதிர்க்கும் சீராய்வு மனுக்களுக்கு பெரும் முக்கியத்துவம் கிடைக்காது என்பதே சட்ட வல்லுநர்கள் பார்வையாக உள்ளது.
மேலும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், சுதந்திரத்திற்கு முன்பு போடப்பட்ட காவிரி நதிநீர் தொடர்பான, 1892, 1924ம் ஆண்டு ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே தமிழக அனுமதியின்றி புதிதாக கர்நாடகாவில் அணை கட்ட முடியாது.