ரத்ததானம் செய்வோர், நோயாளிகள் இடையே பாலம் அமைத்து அசத்தும் பெங்களூர் பள்ளி மாணவி
பெங்களூர்: ரத்த தானம் செய்வோருக்கும், ரத்தம் வேண்டுவோருக்கும் பாலமாய் வெப்சைட் உருவாக்கி உதவி வருகிறார் பெங்களூரை சேர்ந்த பள்ளி மாணவி.
அன்னதானத்தை போலவே, தானத்தில் சிறந்த தானம் ரத்த தானம். ஆனால், அவசரமாக ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும்போது, யாரை அணுகுவது, எப்படி ரத்தத்தை பெறுவது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது.
டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ரத்தம் தேவை என்று தகவலை பரப்பினாலும், அதை ரீட்விட் செய்வோர்தான் அதிகமே தவிர, தானாக முன்வந்து ரத்தம் கொடுப்போர் சொற்பமே.

பள்ளி மாணவி
ரத்தம் கொடுப்பதோடு, அதை உரிய நேரத்திற்குள் கொடுப்பது அவசியம். இந்த குறைபாடுகளை நீக்க வெப்சைட் ஒன்றை உருவாக்கியுள்ளார் பெங்களூரிலுள்ள 'தி இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் பெங்களூர்' (TISB) என்ற பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆருனிகா மகம்.

வெப்சைட்
வெப்சைட் உருவாக்குநர் துணை கொண்டு ஆருனிகா உருவாக்கியுள்ள வெப்சைட்டின் பெயர், givebloodindia.org ஆகும். அத்தோடு நில்லாமல், பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்களுக்கு சென்று, ரத்த தான அவசியத்தையும், தனது வெப்சைட் செயல்பாடுகளையும் எடுத்துரைத்து வருகிறார்.

பதிவு செய்துள்ளனர்
ஆருனிகா மற்றும் அவரது தோழர், தோழிகளின் விடாமுயற்சியால், ரத்ததானம் செய்ய இதுவரை 500 பேர் வெப்சைட்டில் பெயர்களை பதிவு செய்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் ரத்தம் தேவைப்படும் 15 பேர் இந்த வெப்சைட் மூலமாக பலனடைந்துள்ளனர்.

எஸ்எம்எஸ்
ரத்ததானம் செய்வோரின் பெயர், பிளட் குரூப், போன் எண் போன்றவை அந்த வெப்சைட்டில் தரப்படுகிறது. ரத்தம் தேவைப்படுவோர் வேண்டுகோள்விடுக்கும்போது, ரத்ததானம் செய்வோர் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்படுகிறது. இதனால் காலவிரையம் மிச்சமாகி, உடனடியாக ரத்தம் உரியவர்களை சென்று சேர்கிறது.

கைகொடுக்கும் குடும்பம்
எஸ்எம்எஸ் அனுப்ப ஆகும் செலவு மற்றும் வெப்சைட் பராமரிப்பு செலவீனங்களை ஆருனிகா தந்தை சேத்தன் மகம் ஏற்றுக்கொண்டுள்ளார். 47 வயதாகும், சேத்தன் தனியார் நிறுவனம் ஒன்றில் எம்.டியாக உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சிறுவயதிலேயே சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று எனது மகளுக்கு இருக்கும் ஆர்வம் என்னை பெருமையடையச் செய்துள்ளது. எனவே, அவள், கேட்டதும், திட்டத்திற்கு ஒப்புக்கொண்டேன்" என்றார்.

சபாஷ் பணி
ஆருனிகா கூறுகையில், "வெப்சைட் பற்றி கூறியதும், எனது தந்தை மறுபேச்சு பேசாமல் ஒப்புக்கொண்டார். நானே எனது சொந்தக்காலில் நின்று கற்க வேண்டும் என்பதற்காக, வெவ்வேறு தனியார் நிறுவனங்களிடம் பேசி, ஸ்பான்சர்ஷிப் செய்ய உதவுகிறார். இனிமேல் சொந்த நிதியை கொண்டே வெப்சைட்டை நிர்வகிப்பேன்" என்றார். இந்த வெப்சைட்டை உருவாக்கியவரும், ஆருனிகாவிடம் பணம் வாங்கவில்லையாம். இந்த இளம் தலைமுறையினரிடம் ஏற்பட்டுள்ள சமூக நலன் பார்வை பாராட்டுக்குறியதே.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications