Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர், கிளர்க் கைது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர், கிளர்க் கைது- வீடியோ

    பாட்னா: பாட்னாவில் 5ம் வகுப்பு மாணவியை 9 மாதங்களாக பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர் மற்றும் கிளர்க்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள புல்வாரி ஷரீப் பகுதியில் இருக்கும் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும் மாணவி புதன்கிழமை வீட்டிற்கு வந்ததும் வாந்தி எடுக்கத் துவங்கியுள்ளார். பெற்றோர் உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    School principal, clerk held for raping a 5th standard girl

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விளக்கம் கேட்டனர். பள்ளி முதல்வரும், கிளர்க்கும் சேர்ந்து கடந்த 9 மாதங்களாக தன்னை மிரட்டி கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக சிறுமி தெரிவித்தார்.

    அந்த கொடூர சம்பவத்தை கிளர்க் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை வெளியே கூறினால் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

    வீட்டு பாடத்தை சரி பார்க்கிறேன் என்ற பெயரில் மாணவியை தனது அறைக்கு அழைத்து முதல்வர் பலாத்காரம் செய்துள்ளார். அதில் இருந்து 9 மாதங்களாக சிறுமியை சீரழித்துள்ளனர்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பள்ளி முதல்வர், கிளர்க்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+