குண்டுவெடிப்பு எதிரொலி - பெங்களூரில் பாதுகாப்பு அதிகரிப்பு
பெங்களூர்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானார். இதையடுத்து நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெங்களூரிலும் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மோப்ப நாய்கள் சகிதம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நெல்லை,மதுரை,கன்னியாகுமரி, விழுப்புரம்,கோவை தென்காசி என அனைத்து ரயில் நிலையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பயணிகள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கபடுகின்றனர். மேலும் ரயில்வே பாதுகாப்பு படை, தமிழ்நாடு காவல்துறை மோப்ப நாய் உதவியுடன் பயணிகள் கொண்டு வரும் பொருட்கள் மற்றும் பார்சல் போன்றவற்றை சோதனை செய்து வருகின்றனர்.
திருச்சி வழியாக செல்லும் அனைத்து ரயில்களின் பெட்டிகளும் சோதனைக்கு உட்பட்ட பின்னரே நிலையத்தில் இருந்து செல்ல அனுமதிக்கபடுகின்றது.