டெல்லி சம்பவம் எதிரொலி: சென்னை வண்டலூர் பூங்காவில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு
சென்னை: நேற்று டெல்லி உயிரியல் பூங்காவில் பார்வையாளர் ஒருவரை வெள்ளைப் புலி ஒன்று கடித்துக் கொன்றதையடுத்து, சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப் பட்டுள்ளது.
நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் நண்பர்களுடன் டெல்லி உயிரியல் பூங்காவைப் பார்வையிட வந்திருந்த மன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் எதிர்பாராத விதமாக வெள்ளைப் புலி அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் விழுந்தார்.
புலியைப் புகைப்படம் எடுப்பதற்காக முயர்சித்த போது, அம்மாணவர் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. மற்ற பார்வையாளர்களின் முன்னிலையிலேயே அம்மாணவரை வெள்ளைப் புலி கடித்துக் கொன்றது. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குற்றச்சாட்டு...
பாதுகாவலர்கள் சரியான நேரத்திற்கு வராததும், தடுப்புச் சுவரின் உயரம் குறைவாக இருந்ததுமே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடுதல் பாதுகாப்பு...
நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது இந்தச் சம்பவம். இதைத் தொடர்ந்து நாட்டில் உள்ள மற்ற உயிரியல் பூங்காவில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வண்டலூர் உயிரியல் பூங்கா...
அதன்படி, சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவிலும் விலங்குகளால் பார்வையாளர்களுக்கு ஆபத்து ஏற்படா வண்ணம் அதிக எச்சரிக்கையுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

பார்வையாளர்கள்...
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு தினந்தோறும் வெவ்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இங்கும் வெள்ளைப் புலிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications