இந்திய ராணுவத்திற்கு எதிராக பேச்சு.. அமனெஸ்டி இண்டர்நேஷனல் மீது தேசவிரோத வழக்கு
பெங்களூரு: இந்திய ராணுவத்திற்கு எதிராக பேசியதாகக் கூறி, அமனெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பினர் மீது தேசவிரோத வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது அமனெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டுப் போர், ஈரான், ஈராக்கில் நடைபெற்று வரும் போர் உள்ளிட்ட முக்கியமான பிரச்சனைகளின் மீது கவனம் குவித்து மனித உரிமைகளை பேசி வரும் இந்த அமைப்பின் மீது தேச விரோத வழக்கு தொடப்பட்டுள்ளது.

அமனெஸ்டி அமைப்பினர் பெங்களூருவில் உள்ள கல்லூரி ஒன்றில் காஷ்மீரில் நடைபெறும் வன்முறைகள் குறித்த கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர்.
அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது, அகில பாரதிய வித்யார்தி பரிஷத் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, போலீசில் புகார் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு ஏபிவிபி அமைப்பின் செயலாளர் ஜெயபிரகாஷ் அளித்துள்ள அந்தப் புகாரில், அமனெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பினர் தீவிரவாதத்திற்கு ஆதரவாகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பேசினார்கள் என்றும் ராணுவத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏபிவிபியின் இந்த செயலுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து மனித உரிமை குழுவினர் கூறும் போது, பெங்களூரு போலீசாரிடம் முறைப்படி முன்கூட்டியே அறிவித்துவிட்டுத்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்றும், இந்த நிகழ்ச்சிக்கு காஷ்மீர் பண்டிட் சமூகத்தின் பிரதி அழைக்கப்பட்டு பேச வைக்கப்பட்டதையும் குறிப்பிட்டனர்.
இதுகுறித்து அமனெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் செயல் இயக்குனர் ஆகார் பட்டேல் பேசும் போது, அரசியல் அமைப்பின்படி ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தால் கூட அது இந்தியாவிற்கு விரோதமான ஒன்றாக மாற்றப்படுகிறது. குற்றமாக கருதப்படுகிறது. நாங்கள் நடத்திய நிகழ்விற்கு போலீசார் அழைக்கப்பட்டு அவர்களும் கலந்து கொண்டனர். ஆனாலும் எங்களுக்கு எதிராக தேச விரோத வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் மீதான நம்பிக்கை குறைந்துள்ளதை காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications