ஆம் ஆத்மியின் முக்கிய நிர்வாகி வழக்கறிஞர் பூல்கா கட்சியில் இருந்து விலகல்
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்: ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகரும், மூத்த வழக்கறிஞருமான ஹெச்.எஸ்.பூல்கா அக்கட்சியில் இருந்து விலகினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திராகாந்தி கொல்லப்பட்டதை தொடர்ந்து சீக்கியர்களை குறிவைத்து கொன்று குவிக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க போராடி வருகிறேன். எனவே அரசியல் அதற்கு இடையூறாக இருக்க கூடாது என்பதால் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரான, அரவிந்த் கேஜ்ரிவாலுடன் பேசி முடிவெடுத்து அரசியலை விட்டு விலகுகிறேன்.

கட்சியின் பதவிகள் அனைத்தையும் ராஜினாமா செய்கிறேன். அதேநேரம், ஆம் ஆத்மியுடனான பந்தம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications