மே.வங்கத்திலும் லோக்சபா தேர்தலில் போட்டியிட அஞ்சும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்
கொல்கத்தா: தமிழகத்தைப் போலவே மேற்கு வங்க மாநிலத்திலும் லோக்சபா தேர்தலில் போட்டியிட அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க எந்த ஒரு கட்சியும் முன்வரவில்லை. இதனால் அக்கட்சி தனித்துப் போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது என்பதால் ஜி.கே.வாசன், கே.வி. தங்கபாலு உள்ளிட்ட பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் நாங்கள் தேர்தலிலேயே போட்டியிடவில்லை என்று பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
இதேபோல் மேற்கு வங்க மாநிலத்திலும் காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லையாம். அம்மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்குப் பிறகுதான் ஓரிரு தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெல்ல முடியும் என்ற நிலை. அதுவும் எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸுக்கு சவாலாக இருக்கும்.
இந்நிலையில் அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மனாஸ் பூனியா, பிரதீப் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தும் அதை நிராகரித்துவிட்டனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவர்கள் இப்படி தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்குவதால் காங்கிரஸ் மேலிடம் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications