ஸ்ரீநகர் பேரணியில் பாக். கொடி... மஸ்ரத் ஆலம் மீண்டும் கைது! கிலானிக்கும் வீட்டுக் காவல்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் கொடிகளை ஏந்தியபடி வந்த விவகாரத்தில் பிரிவினைவாத இயக்கத் தலைவர் மஸ்ரத் ஆலம் கைது செய்யப்பட்டுள்ளார். ஹூரியத் மாநாட்டு கட்சித் தலைவர் கிலானியும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீர் திரும்பிய ஹூரியத் மாநாட்டு கட்சித் தலைவர் கிலானிக்கு நேற்று முன் தினம் ஸ்ரீநகரில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு பேரணியில் பாகிஸ்தான் நாட்டு கொடிகள் பறக்கவிடப்பட்டன. பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதற்கு மத்திய அரசு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் மஸ்ரத் ஆலமோ, மக்கள் தங்களது உணர்வுகளைத்தான் வெளிப்படுத்தினர் என்று நியாயப்படுத்தியிருந்தார்.
ஆனாலும் மஸ்ரத் ஆலமை கைது செய்தாக வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை மஸ்ரத் ஆலம் கைது செய்யப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி - பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்த உடனேயே மஸ்ரத் ஆலம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ராணுவத்தால் 2 இளைஞர்கள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி புல்வாமா மாவட்டம் திரால் நகரில் இன்று பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் பங்கேற்க கிலானி திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் கிலானியை அதில் பங்கேற்க விடாமல் போலீசார் அவரை தடுத்து வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். அவரது வீடு முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பேரணி நடைபெற உள்ள திரால் நகரிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications