டிவி நடிகர் பிரதீப் சாவில் திடீர் திருப்பம்.. தலை, உடம்பில் ரத்தக்காயங்கள்.. கொலையா என சந்தேகம்!

டிவி நடிகர் பிரதீப் குமார் தலை மற்றும் உடம்பில் ரத்தக்காயங்கள் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் போலீசார் சந்தேகித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: டிவி நடிகர் பிரதீப் குமாரின் தலை மற்றும் உடம்பில் ரத்தக்காயங்கள் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். இதுதொடர்பாக பிரதீப்பின் மனைவி பவானி மற்றும் வீட்டில் தங்கியிருந்த உறவுக்கார இளைஙஞரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்து வந்த நடிகர் பிரதீப் குமார் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இளம் நடிகர், திருமணம் செய்து ஓராண்டுக்குள் தற்கொலை செய்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொருளாதார நெருக்கடியே பிரதீப் குமாரின் தற்கொலைக்கு காரணம் என கூறப்பட்டது. அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலை, உடம்பில் காயங்கள்

தலை, உடம்பில் காயங்கள்

இந்நிலையில் நடிகர் பிரதீப்குமாரின் தலை மற்றும் உடலில் ரத்தக்காயங்கள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறியுள்ள போலீசார், தற்கொலையை மர்ம மரணமாக மாற்றி விசாரித்து வருகின்றனர்.

விசாரணையை திருப்பிய போலீஸ்

விசாரணையை திருப்பிய போலீஸ்

தூக்கில் பிணமாக தொங்கிய நடிகர் பிரதீப் தலையில் ரத்தக் காயம் உள்ளது என்றும், எனவே அவரது சாவில் மர்மம் இருப்பதாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்படுகிறது என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதீப் குமாரின் மனைவி பவானி மற்றும் வீட்டில் தங்கியிருந்த ஷிராவண் என்ற உறவுக்கார இளைஞர் பக்கம் விசாரணை திருப்பியுள்ளனர்.

அலங்கோலமாய் கிடந்த அறை

அலங்கோலமாய் கிடந்த அறை

பிரதீப் தூக்கில் தொங்கிய அறையை போலீசார் சோதனை நடத்தியபோது தரையிலும், படுக்கையிலும் ரத்தக் கறைகள் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த பொருட்கள் உடைந்து தாறுமாறாக சிதறி கிடந்தன. கண்ணாடிகளும் உடைந்து அறையே அலங்கோலமாய் இருந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

விளக்கமளித்த மனைவி

விளக்கமளித்த மனைவி

இதுகுறித்து பிரதீப்பின் மனைவியான நடிகை பவானியிடம் விசாரித்த போது கதவு மூடியிருந்ததால் ஜன்னலை உடைத்தோம். அதனாலேயே கண்ணாடிகள் சிதறின எனக்கூறினார்.ஷிராவணிடம் நடத்திய விசாரணையில் பிரதீப் அனுமதியோடுதான் வீட்டில் தங்கினேன் என்றும் சிலர் அதனை தவறாக பேசியதாகவும் கூறியுள்ளார்.

செல்போன்களை கைப்பற்றி விசாரணை

செல்போன்களை கைப்பற்றி விசாரணை

இதைத்தொடர்ந்து பிரதீப் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான பாவனி, வீட்டில் தங்கி இருந்த உறவுக்கார இளைஞர் ஷிராவண் ஆகியோரின் செல்போன்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். பாவனியின் உறவுக்கார இளைஞரான ஷிராவண் என்பவர் இரண்டு மாதங்களாக அவர்களுடன் ஒரே வீட்டில் தங்கி இருக்கிறார்.

வேறொருவரின் படம்

வேறொருவரின் படம்

சமீபத்தில் பாவனி தனது வாட்ஸ் அப் புரஃபைலில் ஷிராவணுடன் சேர்ந்து இருப்பது போன்ற படத்தை வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இது பிரதீப்புக்கு பிடிக்கவில்லை என்றும், இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கொலையா? தற்கொலையா? என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+