பெண்களின் மானத்தைக் காட்டிலும் வாக்குரிமையே உன்னதமானது.. சரத் யாதவ் பேச்சால் சர்ச்சை !
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான சரத் யாதவ், பெண்களின் கற்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பாட்னா: நம் நாட்டு பெண்களின் மானத்தைக் காட்டிலும் வாக்குரிமையே உன்னதமானது என்று ஐக்கிய ஜனதா தளக் கட்சி மூத்த தலைவர் சரத் யாதவின் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சரத் யாதவ், இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உயர்ந்த கவுரம் வாக்குரிமை மட்டுமே. அத்தகைய வாக்குகளை பணத்துக்காக மக்கள் விற்கக்கூடாது. நம் நாட்டு பெண்களின் மானத்தைக் காட்டிலும் வாக்குரிமையே உன்னதமானது.

ஓட்டுக்குப் பணம் கொடுத்தால், வாங்கக்கூடாது என்பதை நாட்டு மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஏனென்றால், ஓட்டு என்பது நாம் பெற்ற மகள்களைப் போன்றதாகும். நமது மகள் அல்லது ஒரு பெண் கற்பிழந்தால், அவள் சார்ந்த சமூகம் மற்றும் ஊர் என அனைவரின் மரியாதை பாதிக்கப்படும் அதேசமயம், வாக்குகளை விற்பதன் மூலம் வாக்குரிமைக்கு களங்கம் ஏற்படுவது என்பது ஒட்டுமொத்த நாட்டையே பாதிக்கும் என்றார்.
சரத் யாதவின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் வாக்குரிமையின் மேன்மையை உணர்த்துவதற்காகவே அவ்வாறு கூறினேன் என்றார். பெண்களை அவமதிக்கும் வகையில் சரத் யாதவ் பேசியதற்கு பல்வேறு மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளிக்கக் கோரி தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications