மும்பை சக்தி மில் வளாக பலாத்கார வழக்கு- 2 சிறார்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு!!
Subscribe to Oneindia Tamil

மும்மையில் சக்தி மில் வளாகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி பெண் புகைப்பட கலைஞர் 5 பேர் கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டார். இதே மில் வாளகத்தில் டெலிபோன் ஆபரேட்டரும் 5 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இந்த இரு வழக்குகளிலும் ஈடுபட்ட விஜய் ஜாதவ் (வயது 19), காசிம் பெங்காலி (21), சலீம் அன்சாரி (28) ஆகியோருக்கு மும்பை செசன்சு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்திருந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய 2 சிறார்களை நீதிமன்றம் குற்றவாளி என்று இன்று தீர்ப்பளித்தது. அத்துடன் இருவரும் மூன்றாண்டு காலம் சீர்திருத்த பள்ளியில் இருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications