For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை சக்தி மில் வளாக பலாத்கார வழக்கு- 2 சிறார்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

Shakti Mills Gang-Rapes: Two Juveniles Convicted, Sent To Correction School
மும்பை: மும்பை சக்தி மில் வளாகத்தில் நடந்த பத்திரிகையாளர் பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய 2 சிறார்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். இருவரும் 3 ஆண்டுகாலம் சீர்திருத்த பள்ளியில் தங்கி இருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மும்மையில் சக்தி மில் வளாகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி பெண் புகைப்பட கலைஞர் 5 பேர் கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டார். இதே மில் வாளகத்தில் டெலிபோன் ஆபரேட்டரும் 5 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இந்த இரு வழக்குகளிலும் ஈடுபட்ட விஜய் ஜாதவ் (வயது 19), காசிம் பெங்காலி (21), சலீம் அன்சாரி (28) ஆகியோருக்கு மும்பை செசன்சு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்திருந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய 2 சிறார்களை நீதிமன்றம் குற்றவாளி என்று இன்று தீர்ப்பளித்தது. அத்துடன் இருவரும் மூன்றாண்டு காலம் சீர்திருத்த பள்ளியில் இருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

English summary
Two minors have been convicted for the gang-rapes of a photojournalist and telephone operator in the abandoned Shakti Mills compound in Mumbai last year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X