பீகாரில் தேசியவாத காங்கிரஸ் கட்சி அதிரடியாக கலைப்பு

Subscribe to Oneindia Tamil

பாட்னா: மத்திய அமைச்சர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி பீகார் மாநிலத்தில் முழுவதுமாக கலைக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. பீகாரில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கும் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதில் காங்கிரஸுக்கு 13 தொகுதிகளும், தேசியவாத காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் தருவதாக லாலு பிரசாத் யாதவ் கூறினார். ஆனால் இன்னமும் உடன்பாடு ஏற்படவில்லை.

Sharad Pawar dissolves Bihar NCP after unit chief resigns

இந்நிலையில் பீகார் மாநில தேசியவாத காங்கிரஸ் தலைவர் நாக்மணி தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு புகழாரம் சூட்டி பேசி வருகிறார்.

இதனால் வேறுவழியில்லாமல் பீகார் மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியையே கலைப்பதாக சரத்பவார் அறிவித்துள்ளார்.

இது, காங்கிரஸ்-ராஷ்டீரிய ஜனதா தளம்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவாக கூறப்பட்டது. நாக்மணி தனது பதவியை ராஜினாமா செய்தது மட்டும் இல்லாமல் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை பாராட்டினார்.

இதனையடுத்து பீகார் மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சியை கலைப்பதாக அக்கட்சியின் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+