For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி வீட்டில் விழுந்து பவார் காயம்- ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மும்பைக்குக் கொண்டு செல்லப்பட்டார்

Google Oneindia Tamil News

டெல்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று காலை தனது டெல்லி வீட்டில் வழுக்கி விழுந்து காயமடைந்தார். இதையடுத்து அவரை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மும்பைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

73 வயதாகும் பவார் இன்று காலை தனது டெல்லி வீட்டு வளாகத்தில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் அப்போது தடுமாறி விழுந்து விட்டார். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டு விட்டது. மேலும் முதுகிலும் அடிபட்டது.

Sharad Pawar

இதையடுத்து ஏர் ஏம்புலன்ஸ் மூலம் அவரை மும்பைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

மும்பை கொண்டு செல்லப்பட்ட பவாருடன் அவரது மனைவி பிரதீபா, மகள் சுப்ரிய சுலே ஆகியோரும் உடன் சென்றனர்.

199ம் ஆண்டு காங்கிரஸை விட்டு விலகி தேசியவாத காங்கிரஸை உருவாக்கினார் பவார். 3 முறை மகாராஷ்டிர முதல்வராக இருந்திருக்கிறார். ஒரு முறை மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார். தற்போது ராஜ்யசபா உறுப்பினராக இருக்கிறார்.

English summary
NCP Chief Sharad Pawar was today injured when he slipped during morning walk at his residence here and has been taken to Mumbai by air ambulance. Pawar, 73, suffered injury in his leg and apparently in his back and will be admitted to Breach Candy Hospital in Mumbai, sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X