குஜராத்திலும் பாஜகவுக்கு டெல்லி, பீகார் கதிதான் ஏற்படும்.. சொல்வது பாஜக சீனியர் தலைவர்
டெல்லி: குஜராத்தில் பிரதமர் தலைமையில் இத்தனை தலைவர்களை பிரசாரத்திற்கு பயன்படுத்துவது பாஜகவுக்கு பலன் தராது என்று நடிகரும், அக்கட்சி லோக்சபா எம்.பியுமான சத்ருகன்சின்ஹா தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாஜகவுக்காக பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரச்சார பயணங்களை மேற்கொண்டு வருகிறார். 20 மத்திய அமைச்சர்கள், உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட 6 மாநில முதல்வர்கள் இந்த பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சத்ருகன்சின்ஹா டிவிட்டரில் கூறுகையில்,
By pumping in so many leaders at the same time in our own state Gujarat, like we did in Delhi, aren't we showing signs of panic & desperation in anticipation...generally speaking this kind of strategy doesnt work...we've seen it in Delhi & Bihar. Nonetheless our best wishes..!!
— Shatrughan Sinha (@ShatruganSinha) November 29, 2017
டெல்லியில் நாம் பயன்படுத்தியதை போலவே பாஜக ஆட்சியிலுள்ள குஜராத்திலும் அதிகப்படியான தலைவர்களை தேர்தல் களத்திற்கு அனுப்பி வைப்பது நமக்கு அச்சம் ஏற்பட்டுவிட்டதை போன்ற அறிகுறியைத்தான் காண்பிக்கும். பொதுவாக பேசினால் இதுபோன்ற வியூகங்கள் சரிவராது. நாம் டெல்லி, பீகாரிலும் இதை பார்த்துள்ளோம். இருப்பினும், வாழ்த்துக்கள். இவ்வாறு கூறியுள்ளார்.