ராகுலை பிரதமர் ஆக்குவதே காங்கிரசின் முக்கிய நோக்கம்: ஷிண்டே ‘திடீர்’ பல்டி

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இடம்பெற்று உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சருமான சுஷில்குமார் ஷிண்டே நேற்று முன்தினம் மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடுகையில், ‘சரத்பவார் தனது அரசியல் குரு என்றும், அவர் பிரதமரானால் மகிழ்ச்சி அடைவேன்' என்றும் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் பிரதம வேட்பாளராக அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் பெயர் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், ஷிண்டே இவ்வாறு கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து நேற்று மும்பையில் சரத்பவாரிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், ‘நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவது இல்லை' என பதிலுரைத்தார். ஆனால் ஷிண்டேவின் பேட்டி குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இதேபோல் பாட்னாவில் தேசியவாத காங்கிரஸ் பொதுச்செயலாளரான தாரிக் அன்வரிடம், ஷிண்டே கூறியது பற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் பிரதமர் பதவிக்கான போட்டியில் சரத்பவார் இல்லை என்று பதில் அளித்தார். அதேசமயம், பொதுவாழ்க்கையில் அனுபவம் மிக்க சரத்பவாருக்கு பிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளன என்றும் கூறினார்.
இந்நிலையில், நேற்று டெல்லியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஷிண்டே, ‘சரத்பவார் பிரதமரானால் மகிழ்ச்சி அடைவேன் என்று நான் கூறவில்லை. அவர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் எனது நண்பர் என்றும் கூறியதோடு, மராட்டியத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமரானால் மகிழ்ச்சி அடைவேன் என்றுதான் கூறினேன்" என விளக்கமளித்துள்ளார்.
மேலும், ராகுல் காந்தியை அடுத்து பிரதமர் ஆக்குவதே காங்கிரசின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
சீட் நம்பரை குறைக்கும் திமுக.. ஏன் அதிக தொகுதிகள் வேண்டும்? அழுத்தமாக பேசிய கே.பாலகிருஷ்ணன்! -
1971 இல் மிருக பலம் பெற்ற திமுக! சுருண்டு விழுந்த காமராஜர்? இந்திராவுக்கு தண்ணி காட்டிய கருணாநிதி! -
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத்












Click it and Unblock the Notifications