மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: 125 தொகுதிகள் கேட்டு அடம் பிடிக்கும் பாஜக! தொடர் அதிருப்தியில் சிவசேனா!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கால் நூற்றாண்டு கால பாரதிய ஜனதா -சிவசேனா கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. 125 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதில் பாஜக பிடிவாதம் காட்டி வருகிறது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 15-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் எப்படியும் வென்று ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்பது பாஜக மற்றும் சிவசேனாவின் கணக்கு.

பாஜகவைப் பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 135 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறது. சிவசேனாவோ கடந்த 2009-ல் போட்டியிட்ட 169 தொகுதிகளில் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறது.
இதனால் இரு கட்சிகள் இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை முறிந்தது. இந்த நிலையில் மும்பையில் பாஜக தலைவர் அமித்ஷா, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
{ventuno}
அப்போது பாஜகவின் சுயமரியாதையை கூட்டணிக்காக விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறியிருந்தார். அத்துடன் சிவசேனாவுக்கு பாஜக 12 மணி நேர கெடு விதித்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் 125 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி சற்று இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து சிவசேனா எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது. இதனால் இந்த கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications