சந்தர்ப்பவாத என்சிபி-காங்.- சிவசேனா கூட்டணி அரசு 6 மாதம் கூட நீடிக்காது: நிதின் கட்காரி
Recommended Video
ராஞ்சி: மகாராஷ்டிராவில் என்சிபி-காங்கிரஸ்- சிவசேனா கூட்டணி 6 மாதங்கள் கூட நீடிக்காது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக ராஞ்சி வந்த நிதின் கட்காரி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

காங்கிரஸ்-சிவசேனா-என்சிபி கூட்டணி அடிப்படையில் சந்தர்ப்பவாத கூட்டணியாகும். இந்த மூன்று கட்சிகளுக்கும் ஒரே ஒரு நோக்கம் பாஜகவை ஆட்சி அமைக்க விடக் கூடாது என்பதுதான்.
இந்த மூன்று கட்சிகளுமே இணைந்து ஆட்சியை அமைக்க முடியுமா? என்பதே சந்தேகம்தான். அப்படியே இந்த சந்தர்ப்பவாத கூட்டணி ஆட்சியை அமைத்தாலும் அது 6 மாதங்கள் அல்லது 8 மாதங்கள் கூட நீடிக்காது.
இந்த கூட்டணியால் நிலையான ஆட்சியைத் தர முடியாது. சிவசேனாவும் பாஜகவும் இந்துத்துவா கொள்கையின் அடிப்படையில்தான் கூட்டணி வைத்திருந்தன.
அப்போது முதல்வர் பதவி யாருக்கு என்பதை பின்னர் தீர்மானிக்கலாம் என்றுதான் முடிவு செய்திருந்தோம். ஆனால் எதிர்பாராத நிகழ்வுகள் நடந்துவிட்டன. நாங்கள் எங்களால் முடிந்த அளவு முயற்சிகளை மேற்கொண்டோம். அது பலனளிக்கவில்லை.
இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications