கல்யாண் – டோம்பிவிலி நகராட்சி தேர்தலில் பாஜகவை பின்னுக்கு தள்ளியது சிவசேனா!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் - டோம்பிவிலி ஆகிய நகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சிவசேனா தனித்துப் போட்டியிட்டு 52 இடங்களை கைப்பற்றி பாஜகவை பின்னுக்கு தள்ளியுள்ளது.
கூட்டணி கட்சிகளான சிவசேனாவும் பாரதீய ஜனதாவும் கல்யாண் - டோம்பிவிலி நகராட்சி தேர்தலில் தனித்து நின்று போட்டியிடுவதால் இந்தத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

122 வார்டுகளை கொண்ட கல்யாண் - டோம்பிவிலி நகராட்சிகளுக்கு நேற்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை முதலே வாக்குச்சாவடிகளில் திரண்ட வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். நேற்று மாலை நிலவரப்படி 47 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன.
இந்நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் சிவசேனா 52 இடங்களையும், பா.ஜ.க 41 இடங்களையும் கைப்பற்றின. ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா 9 இடங்களிலும், காங்கிரஸ் 4, தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் மற்ற கட்சிகள் 11 இடங்களிலும் வெற்றி பெறுள்ளன.
சமீபகாலமாக பாஜகவுக்கும் சிவசேனாவிற்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. மேலும், பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகுவது குறித்தும் சிவசேனா சிந்தித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வெற்றி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications