ஹைதராபாத்தில் கன்யா குமார் மீது ஷூ வீச்சு
ஹைதராபாத்: தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்யா குமார் மீது, ஹைதராபாத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது ஷூ வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதன் நினைவு தினம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அனுசரிக்கப்பட்ட போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து அப்பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் கன்யா குமார் தேச விரோதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக காங்கிரஸ் தொண்டர்களுடன் ராகுல் காந்தி பேரணியும் நடத்தியிருந்தார்.
பின்னர், இந்த வழக்கில் முக்கிய சாட்சியாகக் கருதப்பட்ட, கன்யா குமார் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடுவது போன்ற வீடியோ செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்தார் கன்யாகுமார்.

இந்நிலையில், கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள ஹைதராபாத் வந்துள்ளார் கன்யா குமார். நேற்று அவர் ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்கு வந்தபோது, உள்ளே நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் கன்யா குமார். அப்போது கன்யா குமார் மீது ஒருவர் ஷூவை வீசித் தாக்குதல் நடத்தினார். விரைந்து செயல்பட்ட போலீசார், அந்நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications