சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழப்புகள் தடுக்கப்பட வேண்டும்: பாகிஸ்தான் தூதர் கருத்து
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சியாச்சினில் இனிமேலும் உயிரிழப்பு நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறியுள்ளார்.
சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததை அடுத்து பாகிஸ்தான் தரப்பில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் கூறுகையில், சியாச்சினில் நிலவி வரும் கடுமையான பருவநிலை காரணமாக இருநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் உயிரிழந்து வருகின்றனர். அதற்காக, நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.
ஆசியாவின் இரண்டு அண்டை நாடுகளும் சியாச்சின் பிரச்சினையை அமைதியான வழியில் தீர்த்துக்கொள்ள முடியும் என நம்புகிறோம். இனிமேலும் உயிரிழப்பு நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இது மிகவும் முக்கியமான உடனடியான பிரச்சினை என்று நாங்கள் உறுதியாக உணர்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சினில், மிகப்பெரும் அச்சுறுத்தல் எதிரியின் துப்பாக்கி தோட்டாக்கள் அல்ல. ஊகிக்க முடியாத, மிக அபாயகரமான பருவநிலைதான். உடலை உறையச் செய்யும் கடும் குளிரில் இந்த வீரர்கள் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications