சியாச்சினில் பலியான 9 வீரர்களின் உடல்கள் இன்று டெல்லி வருகிறது
ஜம்மு: சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியான 9 வீரர்களின் உடல்கள் சிகரத்தில் இருந்து லேவில் உள்ள ராணுவ முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து அவர்களின் உடல்கள் இன்று டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
கடந்த 3ம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள உலகின் மிக உயரமான போர் முனையான சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் மெட்ராஸ் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த 10 வீரர்கள் சிக்கினர். அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. பனிச்சரிவு ஏற்பட்டு 6 நாட்கள் கழித்து வீரர் ஹனுமந்தப்பா 25 அடி ஆழ பனியில் உயிருடன் மீட்கப்பட்டார்.
டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். அதன் பிறகு அவரது உடல் அவரது சொந்த ஊரான கர்நாடக மாநிலத்தில் உள்ள பெடாதூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இறுதிச் சடங்குகளும் செய்யப்பட்டது.

மோசமான வானிலை
சியாச்சின் பனிச்சரிவில் சிக்கிய 4 தமிழக வீரர்கள் உள்பட 9 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். கடந்த 9ம் தேதி அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டும் மோசமான வானிலை காரணமாக அவர்களின் உடல்கள் சியாச்சினில் இருந்து கொண்டு செல்ல முடியவில்லை.

சியாச்சின்
சியாச்சினிலேயே வைக்கப்பட்டிருந்த 9 வீரர்களின் உடல்கள் நேற்று தான் ஹெலிகாப்டர்கள் மூலம் மலையில் இருந்து இறக்கி மலையடிவாரத்தில் உள்ள ராணுவ முகாமிற்கு கொண்டு வரப்பட்டது.

வானிலை
மலையடிவார முகாமில் இருந்து வீரர்களின் உடல்கள் லேவுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து அவர்களின் உடல்கள் டெல்லிக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகின்றன.

டெல்லி
வீரர்களின் உடல்கள் டெல்லிக்கு வந்த பிறகு அங்கிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பலியானவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications