சியாச்சினில் பலியான 9 வீரர்களின் உடல்கள் இன்று டெல்லி வருகிறது
ஜம்மு: சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியான 9 வீரர்களின் உடல்கள் சிகரத்தில் இருந்து லேவில் உள்ள ராணுவ முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து அவர்களின் உடல்கள் இன்று டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
கடந்த 3ம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள உலகின் மிக உயரமான போர் முனையான சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் மெட்ராஸ் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த 10 வீரர்கள் சிக்கினர். அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. பனிச்சரிவு ஏற்பட்டு 6 நாட்கள் கழித்து வீரர் ஹனுமந்தப்பா 25 அடி ஆழ பனியில் உயிருடன் மீட்கப்பட்டார்.
டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். அதன் பிறகு அவரது உடல் அவரது சொந்த ஊரான கர்நாடக மாநிலத்தில் உள்ள பெடாதூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இறுதிச் சடங்குகளும் செய்யப்பட்டது.

மோசமான வானிலை
சியாச்சின் பனிச்சரிவில் சிக்கிய 4 தமிழக வீரர்கள் உள்பட 9 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். கடந்த 9ம் தேதி அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டும் மோசமான வானிலை காரணமாக அவர்களின் உடல்கள் சியாச்சினில் இருந்து கொண்டு செல்ல முடியவில்லை.

சியாச்சின்
சியாச்சினிலேயே வைக்கப்பட்டிருந்த 9 வீரர்களின் உடல்கள் நேற்று தான் ஹெலிகாப்டர்கள் மூலம் மலையில் இருந்து இறக்கி மலையடிவாரத்தில் உள்ள ராணுவ முகாமிற்கு கொண்டு வரப்பட்டது.

வானிலை
மலையடிவார முகாமில் இருந்து வீரர்களின் உடல்கள் லேவுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து அவர்களின் உடல்கள் டெல்லிக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகின்றன.

டெல்லி
வீரர்களின் உடல்கள் டெல்லிக்கு வந்த பிறகு அங்கிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பலியானவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications