பாக். பாடகர் அட்னன் சமிக்கு இந்திய குடியுரிமை வழங்குகிறது மத்திய அரசு?
டெல்லி: பாகிஸ்தான் பாடகர் அட்னன் சமி விடுத்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கூடும் என தெரிகிறது.
பாகிஸ்தானின் லாகூரில் பிறந்த அட்னன் சமி கான், 2001-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி விசிட்டர் விசா மூலம் இந்தியாவுக்கு வந்தார். அதன் பிறகு அவர் தொடர்ந்து இந்தியாவிலேயே தங்கி விசாவைப் புதுப்பித்து வருகிறார்.

பாலிவுட் பாடகரான அட்னன் சமியின் பாஸ்போர்ட் 2010ம் ஆண்டு மே 27ந் தேதி காலாவதியானது. அதைப் புதுப்பிக்க பாகிஸ்தான் அரசு மறுத்து விட்டது.
இதனால் அவர் இந்திய அரசின் உதவியை நாடினார். மனிதாபிமான அடிப்படையில் தான் தொடர்ந்து தங்க அனுமதி கோரினார். கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அவருக்கு அனுமதி கொடுத்தது.
தற்போது தமக்கு இந்திய குடியுரிமையும் வழங்க வேண்டும் என்று அட்னன் சமி மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்று அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications