நீதிபதி லோயா மரணம் பற்றி சிறப்பு புலனாய்வு விசாரணை தேவையில்லை... சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!
நீதிபதி லோயா மரணத்தில் இருக்கும் சந்தேகம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.
டெல்லி : நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணைத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதித்துறையை களங்கப்படுத்தும் உள்நோக்கத்துடன் சிறப்பு விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியான பிரிஜ்கோபால் ஹரிகிருஷ்ணன் லோயா, கடந்த 2014 டிசம்பர் 1-ம் தேதி நாக்பூரில் சக நீதிபதியின் குடும்ப திருமண விழாவுக்கு சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவர் குஜராத்தின் சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்து வந்தார். இந்த வழக்கில் தற்போதைய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். லோயா மரணத்துக்குப் பிறகு பொறுப்பேற்ற நீதிபதி அமித்ஷாவிற்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கில் இருந்து அமித்ஷாவை விடுவித்து உத்தரவிட்டார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் கன்வில்கர், சந்திரதத் உள்ளிட்டோர் அமர்வு கடந்த மார்ச் 16ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்புகள் அனைத்தையும் நிறுத்தி வைத்தனர்.
மஹாராஷ்டிரா அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் தனி விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை என்று கூறியுள்ளது. ஆனால் நீதிபதி லோயா மரணத்தில் வெளிப்படையான விசாரணை நடக்கவில்லை என்பதால் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் விசாரணை அவசியம் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதிபதி லோயா மரணம் இயற்கையானது அல்ல என்று குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் தஷ்வந்த் தவே நீதிபதி லோயா மரணத்தில் சந்தேகம் இருப்பதால் விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்ற வாதிட்டார். அவருடைய மரணம் இயற்கையானது தானா என்ற சந்தேகம் இருப்பதாகவும் தவே கூறினார். தவேவின் வாதத்தை அடுத்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நீதிபதி லோயா மரணம் தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுவிட்டது, அவருடைய மரணம் இயற்கையானது தான் என்றும் அதில் தெளிவாக உள்ளது எனவே இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணை தேவையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர் மற்றும் குரியன் ஜோசப் உள்ளிட்டோர் கடந்த ஜனவரி 12ம் தேதி முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் அனைத்தும் ஜூனியர் நீதிபதிகளுக்கு வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி இருந்தனர். அவர்களின் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது நீதிபதி லோயா மரண வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications