நீதிபதி லோயா மரணம் பற்றி சிறப்பு புலனாய்வு விசாரணை தேவையில்லை... சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!
நீதிபதி லோயா மரணத்தில் இருக்கும் சந்தேகம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.
டெல்லி : நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணைத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதித்துறையை களங்கப்படுத்தும் உள்நோக்கத்துடன் சிறப்பு விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியான பிரிஜ்கோபால் ஹரிகிருஷ்ணன் லோயா, கடந்த 2014 டிசம்பர் 1-ம் தேதி நாக்பூரில் சக நீதிபதியின் குடும்ப திருமண விழாவுக்கு சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவர் குஜராத்தின் சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்து வந்தார். இந்த வழக்கில் தற்போதைய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். லோயா மரணத்துக்குப் பிறகு பொறுப்பேற்ற நீதிபதி அமித்ஷாவிற்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கில் இருந்து அமித்ஷாவை விடுவித்து உத்தரவிட்டார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் கன்வில்கர், சந்திரதத் உள்ளிட்டோர் அமர்வு கடந்த மார்ச் 16ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்புகள் அனைத்தையும் நிறுத்தி வைத்தனர்.
மஹாராஷ்டிரா அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் தனி விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை என்று கூறியுள்ளது. ஆனால் நீதிபதி லோயா மரணத்தில் வெளிப்படையான விசாரணை நடக்கவில்லை என்பதால் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் விசாரணை அவசியம் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதிபதி லோயா மரணம் இயற்கையானது அல்ல என்று குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் தஷ்வந்த் தவே நீதிபதி லோயா மரணத்தில் சந்தேகம் இருப்பதால் விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்ற வாதிட்டார். அவருடைய மரணம் இயற்கையானது தானா என்ற சந்தேகம் இருப்பதாகவும் தவே கூறினார். தவேவின் வாதத்தை அடுத்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நீதிபதி லோயா மரணம் தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுவிட்டது, அவருடைய மரணம் இயற்கையானது தான் என்றும் அதில் தெளிவாக உள்ளது எனவே இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணை தேவையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர் மற்றும் குரியன் ஜோசப் உள்ளிட்டோர் கடந்த ஜனவரி 12ம் தேதி முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் அனைத்தும் ஜூனியர் நீதிபதிகளுக்கு வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி இருந்தனர். அவர்களின் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது நீதிபதி லோயா மரண வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications