For Quick Alerts
For Daily Alerts
Just In
மகாராஷ்டிராவின் விதர்பாவில் கருப்பு தீபாவளி.. ஒரே நாளில் 6 விவசாயிகள் தற்கொலை!
மும்பை: மகாராஷ்டிராவில் தீபாவளி நாளில் கடந்த 24 மணி நேரத்தில் 6 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தீபாவளி நாளான நேற்று வறட்சியின் கோரத்தாண்டவத்தால் ஒரே நாளில் கடனில் சிக்கித் தவித்த 6 விவசாயிகள் விதர்பா பகுதியில் தற்கொலை செய்துள்ளனர்.
இவர்களில் 4 பேர் யவதமால் பகுதியைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய இருவரும் அகோலா மற்றும் அம்ராவதி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள். இந்த தற்கொலை சம்பவத்தால் விதர்பா பிரதேசத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
விவசாயிகள் தொடர் தற்கொலையைத் தடுக்க மத்திய அரசு விரைந்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
English summary
It's been a black Diwali for Vidarbha where six farmers - four from Yavtamal and one each from Akola and Amravati - have committed suicide in the last 24 hours, casting a dark cloud over what should have been a time for rejoicing after the kharif crop.
Story first published: Friday, October 24, 2014, 9:50 [IST]