தியாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பீகார் முதல்வர் நிதீஷ் மீது செருப்பு வீச்சு... இளைஞர் கைது

Subscribe to Oneindia Tamil

பாட்னா: தியாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் முதல்வர் நிதீஷ்குமார், இன்று பக்தியார்பூரில் சுதந்திரப்போராட்ட தியாகிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் நிதீஷ் மீது செருப்பை வீசி எறிந்தார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்தச் செருப்பு நிதீஷ் மீது படவில்லை.

Slipper thrown at Bihar CM Nitish Kumar during a rally, man detained

உடனடியாக அந்த இளைஞரைப் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் பர்வேஷ் குமார் ராய் எனத் தெரியவந்துள்ளது.

மேலும், பீகார் கல்வித் திட்டத்தில் திருப்தியில்லாத காரணத்தால், கோபத்தில் இவ்வாறு செருப்பை வீசியதாக போலீசாரிடம் பர்வேஷ் தெரிவித்ததாக பாட்னா மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் மனு மகராஜ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு பெகுசாராய் மவட்டத்தில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 'சங்கல்ப்ப யாத்திரை' நிகழ்ச்சியில் பங்கேற்ற போதும், நிதிஷ் குமாரை நோக்கி செருப்பு வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+