காங். ஆட்சியில் முடங்கிக் கிடந்த மனித வள அமைச்சகம்.... லோக்சபாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி சாடல்!
டெல்லி: முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மத்திய மனித வளத்துறை அமைச்சகம் செயலம் முடங்கிக் கிடந்ததாக அமைச்சர் ஸ்மிருதி இரானி சாடியுள்ளார்.
மத்திய மனித வளத்துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி பொறுப்பேற்றது முதல் பல்வேறு மூத்த அதிகாரிகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் என்றே குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் இன்று லோக்சபாவில் முந்தைய காங்கிரஸ் அரசின் மனித வளத்துறை அமைச்சக செயல்பாடுகள் குறித்து ஸ்மிருதி இரானி பேசியதாவது:

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கடைசி நாட்களில் மத்திய மனித வளத்துறை அமைச்சகம் மிக மோசமான செயல்பாடுகளைக் கொண்டிருந்தது... குறிப்பாக தமிழகம், கேரளா, ஒடிஷா, குஜராத், காஷ்மீர் என பல மாநிலங்களின் பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் அவசரம் காட்டியது அப்போதைய அரசு.

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவருமான முரளி மனோகர் ஜோஷி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதேபோல் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்னர் மே13-ந் தேதியன்று சாகரில் உள்ள ஹரிசிங் கெளர் பல்கலைக் கழக துணைவேந்தராக காஜ்பியே நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர் யோகிந்த அலாக் மத்திய மனித வள அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
காங்கிரஸ் அரசின் கடைசி சில மாதங்களாகவே மத்திய மனித வளத்துறை அமைச்சக செயலற்றே கிடந்தது. ஆந்திரா மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் பல்லம் ராஜூ ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதா இல்லையா என தெரியாத நிலையில் தலைமையற்ற நிலையில்தான் மனித வளத்துறை அமைச்சகம் இருந்து வந்தது.
இதன் பின்னர் ஹரிசிங் கெளர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட காஜ்பியே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்த பின்னர் இதுபோன்ற பாகுபாடு பார்க்கவில்லை நாங்கள்... கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக இருக்கும் புராபி ராய்க்கும் கூட நாங்கள் சிறப்பு செய்தோம்.
இவ்வாறு ஸ்மிருதி இரானி பேசினார்.
இது தொடர்பான முழு விவரமான செய்திக்கு
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications