காங். ஆட்சியில் முடங்கிக் கிடந்த மனித வள அமைச்சகம்.... லோக்சபாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி சாடல்!
டெல்லி: முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மத்திய மனித வளத்துறை அமைச்சகம் செயலம் முடங்கிக் கிடந்ததாக அமைச்சர் ஸ்மிருதி இரானி சாடியுள்ளார்.
மத்திய மனித வளத்துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி பொறுப்பேற்றது முதல் பல்வேறு மூத்த அதிகாரிகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் என்றே குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் இன்று லோக்சபாவில் முந்தைய காங்கிரஸ் அரசின் மனித வளத்துறை அமைச்சக செயல்பாடுகள் குறித்து ஸ்மிருதி இரானி பேசியதாவது:

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கடைசி நாட்களில் மத்திய மனித வளத்துறை அமைச்சகம் மிக மோசமான செயல்பாடுகளைக் கொண்டிருந்தது... குறிப்பாக தமிழகம், கேரளா, ஒடிஷா, குஜராத், காஷ்மீர் என பல மாநிலங்களின் பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் அவசரம் காட்டியது அப்போதைய அரசு.

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவருமான முரளி மனோகர் ஜோஷி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதேபோல் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்னர் மே13-ந் தேதியன்று சாகரில் உள்ள ஹரிசிங் கெளர் பல்கலைக் கழக துணைவேந்தராக காஜ்பியே நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர் யோகிந்த அலாக் மத்திய மனித வள அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
காங்கிரஸ் அரசின் கடைசி சில மாதங்களாகவே மத்திய மனித வளத்துறை அமைச்சக செயலற்றே கிடந்தது. ஆந்திரா மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் பல்லம் ராஜூ ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதா இல்லையா என தெரியாத நிலையில் தலைமையற்ற நிலையில்தான் மனித வளத்துறை அமைச்சகம் இருந்து வந்தது.
இதன் பின்னர் ஹரிசிங் கெளர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட காஜ்பியே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்த பின்னர் இதுபோன்ற பாகுபாடு பார்க்கவில்லை நாங்கள்... கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக இருக்கும் புராபி ராய்க்கும் கூட நாங்கள் சிறப்பு செய்தோம்.
இவ்வாறு ஸ்மிருதி இரானி பேசினார்.
இது தொடர்பான முழு விவரமான செய்திக்கு
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications