Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுவர் முழுக்க ஓட்டைகள்.. மோசமான கட்டிடம்.. பாம்பு கடித்து இறந்த ஷகாலாவின் வகுப்பறையை இடிக்க முடிவு

பாம்பு கடித்து இறந்த மாணவியின் வகுப்பறையை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நீல நிறத்துக்கு மாறிய ஷகாலாவின் கால்.. அதிர்ந்து ஓடிய பள்ளி குழந்தைகள்

    கோழிக்கோடு: பாம்பு கடித்து இறந்த ஷகாலாவின் கிளாஸ் ரூம் சுவர் முழுக்க ஓட்டைகள், துவாரங்கள்.. பாதுகாப்பே இல்லாத அந்த வகுப்பறையை இடித்து தள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது!

    கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே சுல்தான்பத்தேரியை சேர்ந்தவர் வக்கீஸ் அப்துல் அஜிஸ். இவரது மகள் ஷகாலா. வயநாடு அருகே சுல்தான் பதேரியில் சர்வஜனா என்ற தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஷகாலா ஷெரின் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். இவளுக்கு 10 வயதாகிறது!

    4 நாளைக்கு முன்பு கிளாசில் உட்கார்ந்திருந்த ஷகாலா.. சுவற்றில் இருந்த ஒரு ஓட்டைக்குள் விளையாட்டாக தனது காலை விட்டாள்.. அப்போதே ஏதோ நறுக்கென கடிக்கவும், காலை உடனே வெளியே எடுத்துவிட்டாள். ஆனால் காலில் அந்த இடத்தில் ரத்தம் வந்தது.. உடனே கிளாஸ் டீச்சரிடம் இதை சொல்ல, பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு போன் செய்து விஷயத்தை தெரிவித்து, குழந்தையை சுல்தான் பத்தேரி தாலுகா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    கோழிக்கோடு

    கோழிக்கோடு

    ஆனால், ஷகாலா எதனால் மயங்கி விழுந்தாள், பாம்பு கடித்துதான் இறந்தாளா என்பதை டாக்டர்களால் உறுதி செய்ய முடியவில்லை. அதனால், கோழிக்கோடு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு டாக்டர்கள் சொல்லவும், பெற்றோரும் மகளை அங்கு தூக்கி சென்றனர். ஆனால் அதற்குள் ஷகாலா இறந்துவிட்டாள். பாம்பு கடித்ததும், டாக்டர்கள் அதை உடனே கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சை தந்திருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் என்றும் குற்றஞ்சாட்டி போராட்டமும் நடந்தது.

    வழக்கு பதிவு

    வழக்கு பதிவு

    இந்த சம்பவம் சோஷியல் மீடியாவிலும் வெளியாகி பெரும் பரபரப்பை தந்தது. பத்தேரி தாலுகா அரசு டாக்டர் ஜிஷாமெரின்ஜாய் இதை பற்றி சொல்லும்போது, ஆஸ்பத்திரியில் போதுமான மருந்து இல்லாததால்தான், ஷகாலாவுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை என விளக்கம் அளித்தார். இதையடுத்து அந்த பள்ளியின் முதல்வர் கருணாகரன், துணை முதல்வர் மோகனன், பத்தேரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஜிஷாமெரின்ஜாய் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    விரிசல்கள்

    விரிசல்கள்

    மேலும் பத்தேரி சர்வஜன அரசு, சம்பந்தப்பட்ட பள்ளியை மாவட்ட நீதிபதி, அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போதுதான், அந்த ஷகாலாவின் கிளாஸ் ரூம் கட்டிடத்தில் ஒரு பாதுகாப்பும் இல்லாமல் இருந்தது தெரிந்தது. அந்த சுவரெல்லாம் ஓட்டைகள்.. விரிசல்களுமாக இருந்தன. ஒரு கிளாஸ் ரூமில் இத்தனை துவாரங்கள் இருப்பதா என்று அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று அறிக்கை அளித்தனர்.

    புது கட்டிடம்

    புது கட்டிடம்

    ஏனெனில், இந்த வகுப்பறை கட்டிடம் 30 வருஷத்துக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கட்டிடமாம்.. அதனால் முழுமையாக இடித்துவிட நகர சபை முடிவு செய்துள்ளது. அரசின் நிதி ரூ.2 கோடி செலவில் புதிய கிளாஸ் ரூம் கட்டப்படும் என்றும், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி தரப்பட்டுள்ளது. எனினும் ஷகாலாவின் மரணத்தில் இருந்து அப்பகுதி மக்கள் இன்னமும் மீளவே இல்லை.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+