வருமான வரித்துறையிடம் வசமாக சிக்கிய ஆவணங்கள்.. சிக்கலில் நாட்டின் 50 பெரும் பணக்காரர்கள்
டெல்லி: வருமான வரித்துறையின் புதிய முடிவால் இந்தியாவைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள் 50 பேருக்கு சிக்கல் எழுந்துள்ளது.
வங்கி நிதி மோசடி குற்றவாளி நிரவ் மோடியின் நகைக் கடையில் நகை வாங்கிய 50 பெரும் பணக்காரர்களின் வருமான வரிக்கணக்கை மறுபடியும் பரிசீலனை செய்ய வருமானவரித் துறை முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே, நிரவ் மோடியின் நகைக் கடையில் நகை வாங்கிய பல பணக்காரர்களுக்கு விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நகை வாங்குவதற்கு உங்களுக்கு கிடைத்த பணம் எந்த வகையில் வந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு வழங்கிய பதிலின் அடிப்படையில் தற்போது விசாரணையை ஆரம்பிக்க உள்ளது வருமான வரித்துறை.

பணம் செலுத்தும் ட்ரிக்ஸ்
மிகுந்த விலை உயர்ந்த நகைகளை வாங்கி விட்டு, அதிலும் குறிப்பாக வைர நகைகளை வாங்கி விட்டு, அதற்கு காசோலை, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றின் மூலம் தனித்தனியாக பணம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு தனித்தனி பில்லாக பெறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ரொக்கம் எப்படி
விசாரணையின் போது தாங்கள் ரொக்க பணமாக கொடுத்து நகைகளை வாங்கவில்லை என்று இந்த வாடிக்கையாளர்களில் பலர் தெரிவித்திருந்தனர். ஆனால் நிரவ் மோடியின் நகைக்கடையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் வருமான வரித்துறையிடம் உள்ள ஆதாரங்கள் அடிப்படையில் வைத்துப் பார்த்தால் இது பொய்யான பதில் என்பது தெரிய வருகிறது.

வருமான வரி
எனவே நகை வாங்கியோர்கள் தாக்கல் செய்த, 2014 மற்றும் 2015ம் ஆண்டு வருமான வரி தாக்கல் முதற்கொண்டு தற்போது வரை உள்ள தகவல்களை வருமான வரித்துறை சேகரித்து வைத்துள்ளது. ரொக்கமாக கொடுத்து இவர்கள் வாங்கிய நகை கணக்கில் வராமல் மறைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்துவிட்டதால், இதன் மூலம் சுமார் 50 பெரும் பணக்காரர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுவராஜ் இந்தியா, தலைவர் யோகேந்திர யாதவ் உறவினர்கள் வீடுகளில் சமீபத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது இந்த விசாரணையின் ஒரு அங்கம்தானாம்.

வங்கி மோசடி பின்னணி
நீரவ் மோடி மற்றும் அவரது உறவினரான மேகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூபாய் 13 ஆயிரத்து 400 கோடிக்கு மேல் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை நிரவ் மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐயும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்துகிறது, அப்போதுதான் பல ஆவணங்கள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications